Breaking
Sat. Apr 20th, 2024
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக முட்டை உற்பத்தி 30 சதவீதமாக சரிவடைந்துள்ளதாகவும் இதனால் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அதிகளவான கோழிகள் இறந்துள்ளதாக கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு சந்தையில் பல வருடங்களுக்கு பிறகு முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டையின் விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக முட்டையினால் தாயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளின் விலைகளும் உயர்வடையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *