பிரதான செய்திகள்

முசலி பிரதேச சபையினால் தெருவிளக்குகள் பொறுத்தப்படுமா? முகநூல் பாவனையாளர்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மீள்குடியேற்ற கிராமங்களில் அதிகமான தெருவிளக்குகள் பழுதடைந்த நிலையிலும்,இன்னும் பெருத்தப்படாமல்  காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் என்ற காரணத்தினால் எதிர்வரும் தினங்களில் நோன்பு காலம் என்பதனால் இரவு நேரத்தில் பெண்கள்,ஆண்கள்,சிறுவர்கள்,வயோதிபர்கள் தொழுகைக்காக சென்றுவர வேண்டியிருக்கின்றன இது தொடர்பில் பல முகநூல் பாவனையாளர் கேள்விகளையும்,முகநூல் பதிவுகளையும் சமுகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

வாக்களித்த மக்கள் மத கடமைகளை சிரான முறையில் மேற்கொள்ள முசலி பிரதேசத்தில் உள்ள இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை நடவடிக்கை எடுக்குமா?

மக்கள் நலன் கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீனால் கடந்த காலத்தில் கிராமங்களுக்கு வழங்கப்பட்ட பல தெருவிளக்குகள் இன்னும் பொருத்தப்படாமல் இருப்பதாகவும் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள்,அரசியல்வாதிகள் கரிசனை எடுத்து தெரு விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு முகநூல் பாவனையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Related posts

மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் வில்­பத்­துவில் குடி­யே­று­வ­தற்கு வந்­தி­ருக்க வேண்டும் ஞான­சார தேரர்

wpengine

டக்களஸ் அமைச்சர் தீர்வை வழங்காது விட்டால் மீன்பிடியை நிறுத்திவிட்டு கறுப்புக்கொடி போராட்டம்.

wpengine

தண்ணீர் தொட்டியில் வாலிபர் பிணம்: உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

wpengine