தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

முகநூல் நண்பர்களிடம் எச்சரிக்கை! பரிசுதொகை கிடைக்கும்

முகநூல் ஊடாக அறிமுகமாகும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறத்தப்பட்டுள்ளது.

முகநூல் நண்பர்களாகி பலவழிகளில் ஏமாற்றி வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு நிதி வைப்பிடச்செய்யும் மோசடிகள் தொடர்பாக இதுவரை 15 க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருபவர்கள் மற்றும் கல்விக்காக வருபவர்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக உள்நாட்டவர்களை நட்பு பாராட்டி இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

பலவிதமான முகநூல் முகவரிகளில் இருந்து விடுக்கப்படும் நட்பு அழைப்புகளில் இருந்து பரிசுத்தொகைகள் கிடைக்கப்பெறும் என குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக குற்ற விசாரணை திணைக்களத்தின் ஆரம்ப விசாரணகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related posts

உயர் கல்வியின்றி ஒரு இலட்சம் மாணவர்கள் நிர்க்கதி!

Editor

இடைக்கால நிதி 96மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்

wpengine

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஆதரவில், புங். றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கான “உணவுகூட” திறப்புவிழா

wpengine