பிரதான செய்திகள்

மீலாத் விழா இன்று யாழ்ப்பாணத்தில்

2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று யாழில் கோலாகலமாக நடைபெற்றது. 

2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வில் அதன் ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்றும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இதன்போது பிரதம விருந்தினர் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம். எச். எம். ஹலீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

ரூபா 15 பெறுமதியான இம்முத்திரையில் யாழ்ப்பாணம் முகமதியா ஜும்மா பள்ளிவாசலின் முகத்தோற்றம் (புதுப்பள்ளி) அச்சிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில், பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம். எச். எம். ஹலீம், வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

பேதமற்ற நாட்டினைக் கட்டியெழுப்புவோம்; ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

wpengine

அமைச்சர் ஹக்கீம் கிளிநொச்சிக்கு விஜயம்

wpengine

6ஆவது இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி

wpengine