பிரதான செய்திகள்

மீண்டும் வைத்தியசாலையில் ஞானசார தேரர்

பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொடஹத்தே ஞானசார தேரர் இன்று பிற்பகல் மீண்டும் ஶ்ரீ ஜயவர்தன புர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெலிகடை சிறைச்சாலையில் இருந்து மாதாந்த சிகிச்சைக்காக அவர் இன்று மருத்துவமனைக்கு சென்ற போது தேரரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதேவேளை, சந்தியா எக்னெலிகொடவை தூற்றி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனைக்கு எதிராக ஞானசார தேரர் ஹோமாகம மேல்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் மாதம் 4ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணிலின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சீனத் தூதுவரால் விருந்து..!

Maash

மன்னார் பிரச்சினை வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை

wpengine

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடாத்த திறைசேரியிடம் மீண்டும் பணம் கேட்கும் ஆணைக்குழு!

Editor