பிரதான செய்திகள்

மீண்டும் ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சியான மகிந்த ஆதரவு அணியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த வகையில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வரும் நோக்கில் மகிந்த ஆதரவு அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கையெழுத்திட்டுள்ளனர்.

இதன்படி, பந்துல குணவர்தன, நாமல் ராஜபக்ச, விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்தன், மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று அல்லது நாளைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சருக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவுக்கு வருகை தந்த சிங்க லே அமைப்பு

wpengine

விதை நெல் உற்பத்தியாளர் சங்கம் அமைச்சர் றிசாத்துடன் சந்திப்பு.

wpengine

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டம்

wpengine