செய்திகள்பிரதான செய்திகள்

மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் போலீஸ் பாதுகாவல் வழங்க போலீஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகர் பாராளுமன்றத்தின் பதில் கண்காணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கிய நோட்டீஸின் அடிப்படையிலேயே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பாதாள உலக செயற்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தனித்தனியாக எம்.பி.க்கள் பாதுகாப்பு எடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட பாதுகாப்பு தேவையில்லை எனக் கூறி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொதுப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

Related posts

மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் துாங்கிய மஸ்தான் (பா.உ)

wpengine

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கின் தீர்ப்பு வெளியானது!

Editor

மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவுடன் மணல் அகழ்வு! விலை அதிகரிப்பு வீட்டு திட்ட பயனாளிகள் கவலை

wpengine