பிரதான செய்திகள்

மியன்மார் வான்வழி தாக்குதலில் 30 பேர் பலி, பலர் காயம்!

மியன்மாரில் சாஜைங் பகுதியில் இராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இன்று மியன்மர் இராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. 

இந்த தாக்குதலில் பொதுமக்களில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு மியன்மர் இராணுவம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

முன்னதாக, இராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்கள் முடக்கப்படுவார்கள் என்று மியன்மர் இராணுவம் சமீபத்தில் தெரிவித்த நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Related posts

பொருளாதார மத்திய நிலையத்திற்கு தாண்டிக்குளமே! பொருத்தமானது பிரதமரிடம் கோரிக்கை

wpengine

தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் மரபணு பரிசோதனை

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ள சி.வி.விக்னேஸ்வரன்

wpengine