Breaking
Sat. Apr 20th, 2024

கடந்த 15 ஆண்டுகளாக மியன்மாரில் நிலவிய இராணுவ ஆட்சியின் பின்னர் முதற்கதடவையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மியன்மாரின் புதிய ஜனாதிபதியாக ஹ்டின் க்யாவ் அந்நாட்டு பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மியன்மாரின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகியின் நெருங்கிய ஆதரவாளராக ஹ்டின் க்யாவ் செயற்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மக்களால் ஜனாதிபதியொருவர் நியமிக்கப்பட்டமை ஜனநாயகத்திற்காய் போராடிய ஆங்சாங் சூகியின் வெற்றியென ஜனாதிபதியாக தேரந்தெடுக்கப்பட்ட ஹ்டின் க்யாவ் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *