பிரதான செய்திகள்

மின் பாவனையாளருக்கு சந்தோஷமான செய்தி

மின்சாரத் தடையோ அல்லது கட்டண அதிகரிப்போ மேற்கொள்ளப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வறட்சியான காலநிலை காரணமாக மின் கட்டண அதிகரிப்போ அல்லது மின் துண்டிப்போ மேற்கொள்ளப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில்…

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் நாளாந்த மின் தேவை பத்து வீதத்தினால் அதிகரித்துள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தின் தேவை உயர்வடைந்துள்ளது.

நீர் மின் உற்பத்தி மேற்கொள்ளும் நீர்நிலைகளின் நீர் மட்டம் 36 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

சில நீர்நிலைகளின் நீர் மட்டம் 20 வீதம் வரையில் குறைவடைந்துள்ளது.

பிரதான மின் உற்பத்தி நிலையமான நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 300 மெகாவோட் மின் உற்பத்தி செய்யும் ஓர் இயந்திரம் பழுதடைந்துள்ளது.

இவ்வாறு பல்வேறு சவால்களை எதிர்நோக்கினாலும் மின்சாரத் துண்டிப்போ, கட்டண அதிகரிப்போ மேற்கொள்ளப்படாது என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார் காற்றாலை மின் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் சூழல் பாதுகாப்பு பாதிக்கப்படும் .

Maash

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் மாஹிர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

Maash

பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் – மகளிர்,சிறுவர் விவகார அமைச்சர் சந்ராணி பண்டாரவினால் திறந்து வைப்பு-(படங்கள்)

wpengine