பிரதான செய்திகள்

மின்னல் ரங்காவுக்கு தீணி போடும் வை.எல்.எஸ்.ஹமீட்

(நியாஸ் கலந்தர்)

வடக்கு முஸ்லிம்களின் அழுகுரல்களுக்கு விடிவு கிடைக்கும் காலம் சாதகமாக வரும் போது மீண்டும் பேரினவாதிகளுக்கு வில்பத்து பிரச்சினையை தூக்கி பிடிப்பதற்கு இன்று நீங்கள் கலந்து கொள்ள இருக்கும் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சி வழி சமைத்துக்கொடுக்கும் என தெரிந்தும் கொடிய விஷ ஜந்தான ரங்காவுடன் இணைந்து முஸ்லிம் தேசத்தை காட்டிக்கொடுக்க நினைப்பது உங்களுக்கு மானம் கெட்ட செயலாக தெரியவில்லையா?.

ஆடு நனைகிறது என ஓநாய் கவலைப்படுவதை போன்றே ரங்கா முஸ்லிம்கள் மீது காட்டும் அக்கறை.மலையக மக்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தவனை கடந்த பொதுத் தேர்தலில் துண்டை காணோம் துணியை காணோம் என மலையக மக்கள் துரத்தி அடித்த நிகழ்வு பற்றி நீங்கள் அறியவில்லையா?ரங்கா முஸ்லிம்களை பரம எதிரியாக நினைப்பவன்.அவன் உங்களை பகடை காயாக பயன்படுத்த நினைக்கிறான்.அரசியல் நிலவரங்களை அறிந்திருந்தும் அவன் தீட்டும் சதிக்குள் விழுந்து விட்டீரே!

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அமைச்சர் றிஷாட் பதியுதீனை வெளிப்படையாக எதிர்க்க சக்தி இல்லாத ரங்கா உங்கள் மூலம் அவனது பழியை தீர்க்க நினைக்கிறான்.அதற்கு நீங்களும் துணை போய்விட்டீர்கள்.சொகுசு வாழ்க்கை வாழும் உங்களுக்கு அகதிகள் எம் கஷ்டம் புரிய வாய்ப்பில்லை.ஒரு பிடி சோற்க்கும் ஒரு அடி நிலத்துக்கும் நாங்கள் படும் பாட்டை அனுபவித்தால் தான் தெரியும்.

விடுதலைப்புலிகளினால் உடுத்த ஆடைகளோடு துரத்தி அனுப்பப்பட்ட நாளில் இருந்து இன்று வரை அகதிகள் எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றோம்.அகதிகள் எனும் சொல் கேட்டு வாழும் காலத்திற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்,இழந்த சொந்த நிலங்களை பெற வேண்டும் என தினம் போராடும் எங்கள் பிள்ளை றிஷாட் பதியுதீனை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு நீங்கள் இரவு,பகலாக தூக்கமின்றி அலைவது நியாயமற்றது.ஏழைகளின் வயிற்று எரிச்சலுக்கு ஆளாகி விடாதீர்கள்.எங்களுக்கு உதவி செய்யா விட்டாலும் உபத்திரம் செய்யாமலாவது இருங்கள்.

வடபுல முஸ்லிம்களாகிய எங்களை அகதி என்று சொல்வதை விட அனாதை என்று சொல்லுங்கள்.அகதி எனும் போது மனம் வலிக்கிறது.ஹமீட் சகோதரரே நீங்களும் அகதிகள் என எங்களை தொலைக்காட்சி மூலம் அடிக்கடி கூறி சங்கடப்படுத்தாதீர்கள்.
எரிக்கும் வெயில்,வலிக்கும் குளிர்
கண் அடைக்கும் மனற் காற்று,இவைகளில் இருந்து விடிவை காத்திருக்கிறோம்.விடிவிற்கான தருணம் கூடிவரும் வேளை எட்டப்பர் வேலை பார்க்க துடிப்பது ஏழை பெண்களின் வாழ்வை அழிப்பதற்கு ஒப்பானது.

முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என நமது மார்க்கம் சொல்லி தந்திருப்பதையும் உங்களுக்கு நானும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறேன்.அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த முற்பட்டு மூக்குடைந்து போய் விடாதீர் சகோதரரே.நீங்கள் கப்பலுக்குமேலிருக்கிறீர் ரங்கா கீழ் இருக்கிறான்.ஒரு துவாரத்தின் மூலம் உங்களை மூழ்கடித்து விடுவான் புத்தியோடு நடந்து கொள்ளுங்கள்.

இடம் பெயர்ந்து வாழும் இடத்தில் பல துன்பங்கள்,எங்களது சொந்த வாழ்நிலங்கள் இன்னும் கிடைக்கவில்லை,சொந்தங்கள் பக்கத்திலில்லை இவற்றை எல்லாம் யாரிடம் சொல்லி அழுவோம்.இந்தநிலை மாறி எங்கள் சொந்தமண்ணை சேர வேண்டும் சகோதரரே.அன்னை நிலத்தைமுத்தமிட்டு அழுது துயர் தீர்க்கும் காலத்தை காத்திருக்கும் எம் மக்களுக்கு வரலாற்று துரோகம் இழைக்க வேண்டாம்.

வடக்கு முஸ்லிம்களின் வினயமான வேண்டுகோள்.ரங்கா என்ற அரக்கனுடன் சேர்ந்து எங்கள் வாழ்வை கேள்விக் குறியாக்க வேண்டாம்.அவ்வாறு செய்வீர்களேயானால் அது உங்கள் பரம்பரைக்கு நீங்கள் செய்யும் துரோகமாகும்.அகதி பட்டத்தோடு எழுதும் இறுதி மடலாக இருக்கட்டும்.

Related posts

Newly accredited Sri Lankan Residential Envoy to The State of Palestine presented his credentials today to the Minister of Foreign Affairs Dr Riad Al Malky

wpengine

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் கனடாவில் சுட்டுக்கொலை . .!

Maash

இஸ்லாமிய திருமண சட்டத்தில் திருத்தம்! வாய்மூடி மௌனமான முஸ்லிம் அரசியவாதிகள்

wpengine