Breaking
Fri. Apr 19th, 2024

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டணங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கி இதன்படி அதிகரித்த மின் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


ஊரடங்கு உத்தரவின் போது மின்சார கட்டணப் பட்டியல் பிரச்சினைகள் தொடர்பான ஐந்து உறுப்பினர்கள் குழு வழங்கிய பரிந்துரை அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அறிக்கையால் பரிந்துரைக்கப்பட்டவற்றைத் தாண்டி, பொதுமக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *