பிரதான செய்திகள்

மாநாயக்க தேரர்களின் ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தம்

நாட்டின் பௌத்த மாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் இடைநிறுத்தப்பட உள்ளது.

அரசாங்கத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கண்டி அஸ்கிரி, மல்வத்து, ரமன்ய மற்றும் அமரபுர பீடங்களின் மாநாயக்க தேரர்களைத் தவிர்ந்த ஏனைய பௌத்த மாநாயக்க தேரர்களின் வெளிநாட்டு ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தப்பட உள்ளது.

வெளிநாட்டு ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தப்பட உள்ள மாநாயக்க தேரர்கள் தொடர்பிலான பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

என்ன காரணத்திற்காக இவ்வாறு பௌத்த மாநாயக்க தேரர்களின் ராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தப்படுகின்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Related posts

கிழக்கின் எழுச்சி ஒரு பிரதேசவாதம் அல்ல! எமது விதியை நாமே! எழுதுவோம்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் வேண்டுகேளின் பேரில் மன்னாரில் பாடசாலை! றிப்ஹான் திறந்து வைப்பு

wpengine

தகுதி வாய்ந்த கணக்கியல் கல்வியை வழங்குவதற்கு சான்றிதழ் கணக்காய்வாளர் நிறுவனம் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட்

wpengine