பிரதான செய்திகள்

மஹரகம வர்த்தக நிலைய தீ மூட்டிய சம்பவம்! சந்தோக நபர் கைது

கொழும்பு – மஹரகம பகுதியில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் நேற்று மாலை கைது செய்யப்படடதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள லெதர் கடை ஒன்று நேற்று முன்தினம் தீ மூட்டப்பட்டதோடு நேற்றைய தினம் மஹரகம நகரில் உள்ள பாதணிகள் விற்பனை நிலையம் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது.

குறித்த இரு சம்பவங்களின் CCTV காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை அண்மையில் மஹரகம பிரதேசத்தில் தீ வைக்கப்பட்ட 4 முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்களுக்கும் தீ வைத்தவர் குறித்த நபர் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இஸ்லாமிய பெண்ணை போன்று முகம் மூடிய ஆண்

wpengine

இணைய வழிக் கணக்குகள் பரிமாறப்படுவதாக சமூக ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine

உயர் தர கல்விக்காக புலமைப்பரிசில் ஆரம்பித்து வைத்த அகிலவிராஜ்

wpengine