(எஸ்.எச்.எம்.வாஜித்)
கடந்த 19வது நாளாக வர்த்தகமானி அறிவித்தலை ரத்து செய்யக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தி வரும் மறிச்சுக்கட்டி மக்களுக்கு ஆதரவாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் கொய்யாவாடி கிராமத்தில் வசித்து வரும் மக்கள் இன்று ஜூம்மா தொழுகையினை தொடர்ந்து கொய்யாவாடி விளையாட்டு கழக சம்மேளத்தின் ஏற்பாட்டில் ஆதரவு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டதாக அதன் தலைவர் கமீல் றபீஸ் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கொய்யாவாடி அல்-மூனவூவர் பள்ளிவாசல் உப தலைவர் எம்.கே.றயுஸ்தீன் கருத்து தெரிவிக்கையில்

இவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பூமியினை விட்டு எங்க தான் செல்வார்கள் என்று கூட தெரியாமல் தவிக்கின்றார்கள். அரசாங்கத்தின் இப்படியான நடவடிக்கையினால் இந்த மக்கள் மீண்டும் அகதியாக புத்தளம், அனுராதபுரம், கண்டி போன்ற இடங்களில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்