பிரதான செய்திகள்

மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்ற மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று சிங்கப்பூர் சென்றுள்ளார்.

 

அவருடன் அவரது புதல்வர் ரோஹித்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

இந்த  விஜயத்தை மேற்கொண்டு சென்றதாக அவரது பிரத்தியேக செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிங்கப்பூர் குயின் எலிசபெத் வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைகள் சிலவற்றை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குருநாகல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பில் acmc தலைவர் ரிஷாட் பதியுதீன்.

Maash

90க்கு முன்பு இருந்ததை போன்று இன்று உணர்கின்றேன்! றிப்ஹான் பதியுதீன் மாகாண உறுப்பினர்

wpengine

முஸ்லிம்களை வெளியேற்றியது தவறு ஏற்றுக்கொண்ட பிரபாகரன்! ஏன் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள்,உயர் அதிகாரிகள் மறுக்கின்றார்கள்.

wpengine