பிரதான செய்திகள்

மருதமுனை மனாரியன்ஸ் 95 ஏற்பாடு செய்த வருடாந்த இரத்த தான முகாம்

மருதமுனை மனாரியன்ஸ் 95 அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த இரத்த தான நிகழ்வு நேற்று (24.12.2016 சனிக்கிழமை) கமு/அல்-மானார் மத்திய கல்லூரியில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையுடன் இடம்பெற்ற இவ் இரத்ததான நிகழ்வில் 3 பெண்கள் அடங்கலாக 79 பேர் இரத்த தானம் செய்து தமது பங்களிப்பினை வழங்கி வைத்தனர்.

சென்ற வருடமும் டிசம்பர் மாதம் மனாரியன்ஸ் 95 அமைப்பினரால் இது போன்றதொரு இரத்த தான முகாம் வெற்றிகரமாக நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாவிதன்வெளி முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினரினால் இனவாதம்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் இன,மத வேறுபாடின்றி தலைமன்னாரில் காணி பத்திரம்

wpengine

வன்னி மக்கள் சுதந்திரமான முறையில் சொந்த காலில் சுயதொழில் செய்ய நடவடிக்கை எடுப்பேன் அமைச்சர் றிஷாட்

wpengine