பிரதான செய்திகள்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய அபகரிப்புத் தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போதே எதிர்வரும் 26ஆம் திகதி வரை வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


பிரதிவாதிகள் சார்பில் ஒருவர் மாத்திரமே இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையிலேயே, வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஜனா, கலையரசன் ஆகியோரும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

Related posts

“கீழ்த்திசைக்காற்று” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

ஷாபியிடம் விசாரணைமேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியிடம் வாக்குமூலம்

wpengine

முல்லைத்தீவில் வீடுகள் தரமானதாக இல்லை மக்கள் வெளியேற்றம்.

wpengine