பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்-வவுனியா வீதியில் முதியோர் மீது தாக்குதல்

வவுனியா பட்டானிச்சூர் மூன்றாம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியில் இன்று (20) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி துவிச்சக்கரவண்டியில் முதியவர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவரை மோதித் தள்ளியதுடன் 500 மீற்றர் தூரம் பயணித்து தரித்து நின்றது.

இவ்விபத்துச் சம்பவத்தில் துவிச்சக்கர வண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் முதியவர் காயமடைந்துள்ளார்.

Related posts

மீள்குடியேற்ற செயலணியில் கூட்டமைப்பையும்,காங்கிரஸ்சையும் இணைக்க வேண்டும்.

wpengine

பாடசாலை மாணவர்களுக்கு இனி வருடத்துக்கு 3 தவணைப் பரீட்சைகள் இல்லை – ஒரு தவணையே பரீட்சை!-கல்வி அமைச்சர்-

Editor

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய

wpengine