செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் வந்துள்ள, வெளிநாட்டுப் பறவைகள்.!

மன்னாரில் புலம்பெயர் பறவைகளின் பயணப் பாதையில் அமைந்துள்ளமையால் பல நாடுகளை சேர்ந்த பறவை இனங்கள் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வருகை தருவதோடு சில பறவை இனங்கள் இனப்பெருக்க செயற்பாடுகளை மேற்கொண்ட பின்னர் தங்கள் நாடுகளுக்கு செல்கின்றன.

இவ்வாறான நிலையில் இம் மாதம் ஆரம்பத்தில் இருந்து வெளிநாட்டு பறவைகளின் வரவு மன்னார் மாவட்டத்தில் காணப்படுகிறது. 

குறிப்பாக சதுப்பு  நிலங்களை அண்டிய பகுதிகளில் உள்ளூர் பறவைகளுடன் இணைந்து உணவு உண்ணும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.

ஆனால் மன்னார் மாவட்டத்தில் முன்னைய ஆண்டுகளில் அதிகளவான பறவைகள் வருகை தந்த நிலையில் இம்முறை பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரான காலப்பகுதியில் இவ்வாறான பறவைகளின் வருகை குறைவடைந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக தெரிவான ரவி கருணாநாயக்க

wpengine

நாளை (31) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

wpengine

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமா? இன்று 3 மணிக்கு முக்கிய அறிவிப்பு!

Editor