பிரதான செய்திகள்

மன்னார்- யாழ் பிரதான வீதியில் வாகனம் விபத்து! இருவர் காயம்

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வேட்டையார் முறிப்பு பிரதான வீதியில் இன்று காலை 5.45 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை அலுவலகர்கள் பயணித்த கெப் ரக வாகனம் பயணித்துக்கொண்டிருந்த போது, வேட்டையார் முறிப்பு பகுதியில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் உள்ள மதகுடன் மோதி குறித்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

mannar_acci_3இதன்போது இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளை அலுவலக சாரதி மற்றும் தொழில்நுட்பவியலாளர் ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வாகனமும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.mannar_acci_2

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.mannar_acci_5

Related posts

முஸ்லிம் சமூகம் முறையான வழிகாட்டல் இன்றி அவதி! அமைச்சர் றிஷாட் வேதனை

wpengine

ஊடகவியலாளா்களுக்கு மோட்டாா் பைசிக்கல் யாழ் வழங்கி வைப்பு

wpengine

தாய்நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் உறுதி பூணுவோம்! ஐ.தே.க. பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர்

wpengine