மன்னார் மாவட்ட செயலக முஸ்லீம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் ஹலீம்தீன் அவர்களின் தலைமையில் இப்தார் நிகழ்வு நேற்று(27) 5 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு க.கனகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலும் இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரி, இராணுவ பொறுப்பதிகாரி, பிரதம கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள், மதத்தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.