பிரதான செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் நேர்முகத்தேர்வுகள் 17 தொடக்கம் 20 ஆம் திகதி வரை

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளை அரச சேவையில்
இணைத்துக்கொள்ளும் நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் மூன்று பிரிவுகளில் நேற்று முதல் இந்த நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

மன்னார் மாவட்டத்தில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள்
காணப்படுகின்ற போதும், அவர்களில் சுமார் 515 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் 17 தொடக்கம் 20 ஆம் திகதி வரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

பதிவுகளை மேற்கொள்ளாத பட்டதாரிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர்
மாவட்டச் செயலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும், விடுபட்ட குறித்த
பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி மாலை வரை நேர்முகத்தேர்வுகள் இடம்பெறும் எனவும் மன்னார் மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

26 வயது யுவதியை பலாத்காரம செய்ய காட்டுக்குள் இழுத்து சென்று கொலை செய்த 16 வயது சிறுவன்.

Maash

நீச்சல் உடையில் திருடனை பிடித்த பெண் பொலிஸ்

wpengine

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு 6 பேர் கைது .!

Maash