பிரதான செய்திகள்

மன்னார் மறை மாவட்ட ஆயரை சந்தித்த தூதுவர்

மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை, பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தித்துள்ளார்.
குறித்த விசேட சந்திப்பானது நேற்று மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மன்னார் மாவட்ட மனித புதை குழி தொடர்பாகவும், காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் தொடர்பாகவும், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க மடு அன்னையின் திருத்தலத்திற்கு உயர்ஸ்தானிகர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

12 இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை

wpengine

நிதி அமைச்சகத்தின் பதிவுசெய்யப்பட்ட 176 வாகனங்க இல்லை , தகவல்களைக் கண்டறிய நடவடிக்கை.!

Maash

வவுனியா கல்லூரியில் வாணிவிழா

wpengine