பிரதான செய்திகள்

மன்னார், மடு தேவாலயத்துக்கு வருகின்ற பக்தர்களுக்கு 300வீடுகள்

மன்னார், மடு தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் 300 வீடுகளை நிர்மானிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மடு தேவாலயத்துக்கு வருகின்ற பக்தர்களின் நலன் கருதி, அவர்களின் பயன்பாட்டுக்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

அத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு அவசியமான 300 மில்லியன் ரூபா நிதியை இந்திய அரசாங்கம் பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், குறித்த நிதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடப்பட உள்ளது.

இது தொடர்பில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மலைப்பாதையிலிருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ் – 27 பேர் பலி!

Editor

சமூர்த்தி நிவாரணம் கோரி மூதூர் கிழக்கு-மேற்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

wpengine

உள்ளூராட்சித் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி..!

Maash