பிரதான செய்திகள்

மன்னார் போக்குவரத்து சேவை பாதிப்பு! மாணவர்கள் பல விசனம்

ஜோசப்வாஸ் பிரதேசத்தில் இருந்து மன்னாரிற்கு இடையிலான அரச போக்குவரத்துச் சேவை தடைப்பட்டுள்ளது.

ஜோசப்வாஸ் பிரதேசத்தில் இருந்து மன்னாரிற்கு இன்று காலை (31) மாணவர்களை ஏற்றி செல்லும் போதே பேருந்து புதையுண்டமையினால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பிரதேசங்களில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரியவந்தள்ளது.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1)

இதேவேளை, குறித்த கிராமத்தில் உள்ள மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து சென்று வேறு ஒரு பேருந்தில் மன்னாரிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வீதியானது நீண்டகாலமாக சீர் செய்யப்படாத நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

இதன் காரணமாக, போக்குவரத்துக்களை மேற்கொள்ளுவதில் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.625.0.560.320.500.400.197.800.1280.160.95

Related posts

தோட்ட வேலைகளை செய்வதற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் காணி – ஜனாதிபதி தெரிவிப்பு .

Maash

மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

மட்டக்களப்பு இளைஞர்களுக்கு T shirt வழங்கிய அமீர் அலி

wpengine