பிரதான செய்திகள்

மன்னார்-பள்ளிமுனையில் ஹெரோயினுடன் 6 பேர் கைது

மன்னார் பள்ளிமுல்லை பிரதேசத்தில் 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஹெரோயின் 2.24 கிலோ கிராம்  நிறையுடையது என கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஹெரோயினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புலனாய்வு பிரிவினாரின் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனைநடவடிக்கையின் போது  குறித்த 6 பேரும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 5 இலங்கையர்களும் ஒரு இந்தியரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த  ஹெரோயின் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் வவுனியா விசேட போதைபொருள் ஒழிப்புபிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

வவுனியாவில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ஹக்கீம் சமத்தியுள்ளார்! பரிபாலன சபை மறுப்பு

wpengine

ஒக்டேன் 92 ரக பெற்றோல் 20ரூபாவால் அதிகரிப்பு!

Editor

பலரிடம் இலட்சக்கணக்கான பணம் வேலைவாய்ப்பு தருவதாக ஏமாற்றிய நிதி அமைச்சில் தொழில்புரியும் தாரீக்

wpengine