பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடத்திற்கான ஊடக மாநாடு

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இந்த வருடத்திற்கான ஊடக மாநாடு குறித்த மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த மாநாடு நேற்று காலை மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் உள்ள பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகளூடாக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 

மேலும், மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டிற்கு மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

முஸ்லிம் மக்களின் வாக்குகளின்றி ஒருவராலும் நாட்டின் ஜனாதிபதியாக முடியாது

wpengine

சுமார் 200 இடங்களில் தேடியும் கிடைக்காத செவ்வந்தி, இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம்..!

Maash

வர்த்தக அமைச்சின் ஊடாக அரிசி இறக்குமதி

wpengine