பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்- சிலாவத்துறை வைத்தியசாலைக்கான புதிய குழுவினர் தெரிவு

சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய அபிவிருத்திக் குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன் போது செயலாளராக சட்டத்தரணி PM முஜீபுர் ரஹ்மான் ,பொருளாளராக அதிபர் AT றைஸ்தீன் மற்றும் ஏனைய 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

பதவிவழித் தலைவராக வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி H தன்ஸீஹ் கடமையாற்றுவார்.

குறித்த கூட்டத்தை பல் வைத்திய அதிகாரி ஜனாப் றிஸ்வான் நெறிப்படுத்தினார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சார்பாக பல் வைத்தியத்துறைப் பணிப்பாளர் திருமதி சிறீதேவி கலந்து கொண்டார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சஹ்ரான் தொடர்பில் 2015 ஆண்டு தொடக்கம் விசாரணை!

wpengine

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உட்பட 27 பேர் கைது.

Maash

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மற்றும் உள்ளுராட்சி மாதம் என்பனவற்றின் இறுதிநாள் வைபவம்

wpengine