பிரதான செய்திகள்

மன்னார் கல்வி வலய ஆசிரியர் மாநாட்டின் ஓர் அங்கமான கண்காட்சி

மன்னார் கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு நேற்று (14) மன்னாரில் ஆரம்பமாகிய நிலையில் இன்று(15) புதன்கிழமை காலை மன்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் கண்காட்சி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி செலின் சுகந்தி செபஸ்ரியன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் முதலில் வித்துவம் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.

மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி செலின் சுகந்தி செபஸ்ரியன் குறித்த நூலினை வைபவரீதியாக வெளியீடு செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லா இணைந்து விருது வழங்கி வைத்ததோடு கண்காட்சியையும் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

625.0.560.320.500.400.197.800.1280.160.95 (8)

குறித்த நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதோடு மன்னார் கல்வி வலயத்திலுள்ள சுமார் 1539 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (5)625.0.560.320.500.400.197.800.1280.160.95 (6)

Related posts

வங்கி கணக்கின் ஊடாக பல ரூபா நிதி மோசடி

wpengine

இலங்கை – பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மார்ச்சில் யதார்த்த நிலையை அடையும் பங்களாதேஷ் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

wpengine

ரணிலின் வாக்குமூலத்தை அரசியலுக்கு பயன்படுத்தாமல் சட்டநடவடிக்கை எடுக்கவும்.- பாட்டலி சம்பிக்க ரணவக்க.

Maash