பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் – எருக்கலம்பிட்டி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் – எருக்கலம்பிட்டி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த கிராமத்தில்  46 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், மன்னார் நகரில் புதன்கிழமை (06) மதியம் சுமார் 200 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் குறித்த பி.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் இரண்டு தினங்களில் கிடைக்கும் எனவும் கூறினார்.
அதனை தொடர்ந்தே மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்றார்.

Related posts

என்னோடு கைகோர்த்து இணையுங்கள்; அர்த்தத்துடன், உருவாக்குவோம்! ஜனாதிபதி கோத்தா

wpengine

தற்போதைய நிலையில் இந்த ஆண்டில் தேர்தலொன்று நடைபெறும் சாத்தியம் இல்லை!

Editor

திகனயில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பெருநாள் தொழுகை

wpengine