பிரதான செய்திகள்

மன்னார் இ.போ.ச.நிர்வாகத்தின் அசமந்தபோக்கு! பல மணி நேரம் மக்கள் பாதிப்பு

அதிகாலை ஆலங்குடாவில் இருந்து ஒயா மடுவ பகுதியின் ஊடாக மன்னார் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் பல மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

இன்று காலை மூன்று இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளாதாகவும், இதன் காரணமாக அதிகமான முதீயோர்கள்,அரசாங்க ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இன்னும் பலர் மிகவும் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளார்கள்.

இவ்வாறு முழுமையாக  பாதிக்கப்பட்ட பஸ்களை நீண்ட தூர போக்குவரத்திற்கு பயன்படுத்துவதை மன்னார் போக்குவரத்துசாலை கவனம் செலுத்த வேண்டும்.

மன்னார் இ.போ.ச முகாமைத்துவத்தில் காணப்படும் அசமந்த போக்கினை சீர்செய்ய உரிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை பயணிகள் முன்வைத்துள்ளார்கள்.

நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ளும் பஸ்களுக்கு மீள்நிரப்பிய டயர்களையும் பாவனைக்கு உதவாத பஸ்களை மன்னார் போக்குவரத்து சாலை பாவனைக்கு பயன்படுத்தியுள்ளார்கள்.
பிரயாணிகளின் அசௌகரியங்களை கருத்தில்கொண்டு மக்கள் பிரநிதிகள்,மாவட்ட செயலகம்,இலங்கை போக்குவரத்து சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related posts

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா – 2016

wpengine

சிவப்பு அறிக்கை வௌியிட்டிருந்த 3 குற்றவாளிகள் துபாயில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தல்.

Maash

ரணில் பொருளாதார வல்லுநர் போல் கருத்துகளை முன்வைத்து, பாராளுமன்றத்தில் பெரிய ஆளாக காட்ட முயல்கிறார்.

wpengine