பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் ஆயர்கள் பீ.சீ.ஆர் (BCR) பரிசோதனைக்கு செல்வார்களா?

மன்னார் ஆயர் இல்லத்தில் கட்ட தொழிலில் ஈடுபட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக யாழ் வைத்திய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் இவர் ஆயர் இல்லத்தில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற போது மன்னார் ஆயர் இல்லத்தில் இருக்கின்ற ஆயர்களுடன் பேசி இருக்கலாம்,கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு இருக்கலாம்.அத்துடன் கட்ட வேலை நடைபெறும் இடங்களை பார்வையிட ஆயர் இல்லம் சென்று இருக்கலாம் என பல பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன.


இன் நிலையில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு பலர் கூட சென்றுவந்து இருக்கலாம்.


எனவே மன்னாரில் கொரோனா தொற்று நோய்யினை முழுமையாக கண்டுபிடிக்க ஆயர்களையும்,அங்கு வந்து சென்றவர்களையும் பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மன்னார் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.


இதற்கு மன்னாரில் உள்ள உயரதிகாரிகள் ஆதரவு வழங்க வேண்டும் அத்துடன் மன்னார் ஆயர் இல்லத்தின் உண்மை நிலையினை ஊடகங்கள் மூலம் தெரிவிக்க வேண்டுமென மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

Related posts

மொட்டுக்கட்சி 134 ஆசனங்களை பெறும்! வாக்களிக்கவில்லை என்றால் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்

wpengine

அரசாங்க நிறுவனங்களை விற்பனை செய்ய ரணில், மைத்திரி முயற்சி

wpengine

பர்தாவை கழற்றிவிட்டு பரீட்டை எழுதுங்கள் கம்பளையில்

wpengine