பிரதான செய்திகள்

மன்னார்,வங்காலையில் கோடி ரூபா பெறுமதியான கஞ்சா பொதி

மன்னார், வங்காலை கடற்பகுதியில் வைத்து இன்று அதிகாலை சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த கஞ்சா பொதிகளை வைத்திருந்த நபரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட 184.2 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகளுடன் கைது செய்யப்பட்ட நபர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Related posts

11வயது மாணவனை தாக்கிய விஞ்ஞான ஆசிரியர்

wpengine

மியன்மார் முஸ்லிம்களுக்காக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

wpengine

மைத்திரியுடன் சர்ச்சைக்குரிய யுவதி

wpengine