பிரதான செய்திகள்

மன்னார்,பெரிய மடு பகுதியில் நெல் அறுவடை நிகழ்வு டெனீஸ்வரன்,றிப்ஹான் பங்கேற்பு

மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியமடு கிழக்கு விவசாய அமைப்பினரின் ஏற்பாட்டில் 20-03-2017 திங்கள் காலை 10:30 மணியளவில் பெரியமடு கிழக்கு வயல் அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களும் வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் உத்தியோகபூர்வமாக நெல் அறுவடையை ஆரம்பித்துவைத்தனர், அத்தோடு நிகழ்வின் நிறைவில் பெரியமடு குளத்தினையும் அதனை அண்டிய விவசாய நிலங்களையும் அமைச்சர்களும் அதிகாரிகளும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜபக்ஷ எமக்கு நேரம் ஒதுக்கவில்லை

wpengine

இந்திய மீனவர்களை விடுவித்து, படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் – அநுரவிடம் மோடி கோரிக்கை.

Maash

நாம் கோரும் தீர்வுகள் அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியவையாக இருக்க வேண்டும் என்கிறார் இரா.சாணக்கியன் MP

Editor