பிரதான செய்திகள்

மன்னார்,சிலாத்துறையில் சட்டவிரோத மண் அகழ்வு! உழவு இயந்திரத்திற்கு ஆவணம் இல்லை

(அப்துல்லாஹ்)

மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை பொலிஸ் நிலைய பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டுவந்த இரண்டு உழவு இயந்திரங்களை சிலாவத்துறை பொலிஸ் நிலையம் நேற்று கைப்பற்றி உள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த இரண்டு இயந்திரங்களும் கொக்குப்படையான்,வேப்பங்குளம் பகுதியில் உள்ள இயந்திரங்கள் என தகவல் கிடைக்கபெற்றுள்ளது.இதில் ஒரு இயந்திரத்திற்கு வாகன தகடு,அனுமதி பத்திரம்  இல்லை என அறிய முடிகின்றது.

இது போன்று மன்னார்,முசலி பிரதேசத்தில் தொடராக சட்டவிரோத மண் அகழ்வு தொடராக இடம்பெற்று வருகின்ற போதும் இது தொடர்பில் பல அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

இசைத்துறையில் மிளிர, முடிந்த ஆதரவை வழங்குவதாக ஸ்ரீநிவாஸ் யாழில் தெரிவிப்பு..!!!

Maash

வசந்த முதலிகே பிணையில் விடுதலை!

Editor

26ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு – புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு

Maash