பிரதான செய்திகள்

மன்னார்,ஆண்டாங்குளத்தை சேர்ந்த இவரை காணவில்லை

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 25ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி நேற்று அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை (சலூன்) நடத்தி வரும் சன் நீக்கிலாஸ் என்பவரே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணியளவில் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த குடும்பஸ்தர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 076-8400798, மற்றும் 076-7480357 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

பிரதேச பொதுமக்களின் சம்மதத்துடன் தோனாவினுடைய சரியான அளவினை அடையாளப்படுத்தும் நடவடிக்கை

wpengine

ராஜிதவை பார்வையிட ஜனாதிபதி சிங்கப்பூருக்கு அவசர பயணம்

wpengine

25வருடகாலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வீடுகளை வழங்கிய அமைச்சர் றிஷாட்

wpengine