பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் வெலிபர பகுதியில் கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்ட சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான தம்மென்னா மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இருபது பொட்டலங்களில் கவனமாக பொதி செய்யப்பட்டு கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்டிருந்த 49 கிலோ 380 கிராம் கேரள கஞ்சா கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கேரள கஞ்சா கையிருப்பு தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

நாட்டின் இறைமையை பாதுகாக்க விரும்புபவர்கள் கிருலப்பனை கூட்டத்தில் பங்கேற்பர்

wpengine

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட சமுர்த்தி பயனாளிகள்! பழைய படி முத்திரை வழங்க வேண்டும்

wpengine

சமுகவலைத்தளத்தில் பிரதமர் உடன் சண்டை போடும் நாமல் ராஜபக்ச

wpengine