பிரதான செய்திகள்

மன்னாரில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காயாநகர், ஆகிய கிராமசேவையாளர் பகுதிகளில் மருத்துவ தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலன் கருதி விசேட மருத்துவ முகாம் இடம் பெற்றது.

மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் முதியவர்களுக்கான விசேட செயற்திட்டங்களை டெவ்லிங் நிறுவனம் நடாத்திய வருகிறது. அந்தவகையில் குறித்த இலவச மருத்துவ முகாம் மன்னார் ஈச்சளவக்கை பாடசாலையில் இடம் பெற்றது.

குறித்த மருத்துவ முகாமின் ஆரம்ப நிகழ்வில் அருட்தந்தையர்கள், டெவ்லிங் நிறுவன மாவட்ட இணைப்பாளர், திட்ட இணைப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள், இயன் மருத்துவர்கள், பொது சுகாதார பரிசோதகர் உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவுகளைச்சேர்ந்த 180 மேற்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு மருத்துவ சிகிச்சை உட்பட சக்கரநாற்காலி, ஊன்று கோல் வழங்கப்பட்டதுடன் கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகளும் வழங்கப்பட்டது மேலும் மருத்துவ ஆரோக்கியம் தொடர்பிலான விழிப்புணர்வு செயற்பாடுகளும் மருத்துவ முகாமிடன் இணைந்து இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மியன்மாரின் காட்டுமீராண்டி தனத்திற்கு எதிராக ஒட்டமாவடியில் ஆர்ப்பாட்டம்

wpengine

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை இணையவழியில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

Editor

மன்னார் மாவட்ட மீனவர்கள் பிரச்சினை! கடற்றொழில் அமைச்சரை சந்தித்த அமைச்சர் றிஷாட் (படங்கள்)

wpengine