பிரதான செய்திகள்

மன்னாரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்! இருவர் கைது

மன்னார் – சௌத்பார் புகையிரதவீதி பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் மன்னார் ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் நேற்று இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 923 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் தலைமன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் பல இலட்சம் ரூபா பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஞாயிறு தாக்குதலின் பின்னர் வீண்பழி சுமத்தப்படுகின்றது! கற்பனைக்கு எட்டாத குற்றச்சாட்டுக்கள்

wpengine

ஆட்டமிழக்கச் செய்யும் அரசியல் சிந்தனைகள்;சிறுபான்மை அணிகள் சாதிப்பது எவ்வாறு?

wpengine

வவுனியாவில் குளவி கொட்டியதில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Maash