பிரதான செய்திகள்

மன்னாரில் நீர் தடை

(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

மன்னார் பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் விநியோகம், இன்று தடைப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மன்னார் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்ற உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதாரத் திட்டத்துக்கு அமைவாக, மன்னார் பிரதேசத்தில் பிரதான நீர் விநியோகக் குழாய்களின் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள், மேற்கொள்ளப்படவுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 8 மணி தொடக்கம் மாலை  5 மணி வரை நீர் துண்டிப்பு அமுலில் இருக்கும் என, மன்னார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Related posts

தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது தமிழ் கட்சிகளோ எதையும் செய்யவில்லை

wpengine

நாடு முழுவதிற்கும் அமுலாகும் ஊரடங்குச் சட்டம்

wpengine

கிளிநொச்சியில் தந்தையின் டிப்பர் சில்லில் சிக்கி, ஒன்றரை வயது பெண் குழந்தை பலி !

Maash