Breaking
Thu. Apr 25th, 2024

மன்னாரில் நகர அபிவிருத்தி பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலைய பிரதான வீதியில் இருந்து மன்னார் பொது வைத்தியசாலை வரையில் பாரிய மூன்று கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குறித்த வேலைத்திட்டங்கள் பல மாதங்களாக மந்தகதியில் இடம்பெற்று வருகின்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியோடு, யுனொப்ஸ் (UNOPS) அமைப்பின் நிதியுதவியுடன், பாரிய கல் வெட்டுக்கள் அமைக்கும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.625.0.560.350.160.300.053.800.1280.160.70

மன்னார் பொலிஸ் நிலையம் முன்பாகவும், டெலிகொம் சந்தி மற்றும் வைத்தியசாலை பிரதான வீதி ஆகிய மூன்று இடங்களில் குறித்த கல்வெட்டுக்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த கல்வெட்டுக்கள் அனைத்தையும் அமைக்கும் பணிகள் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் பல மாதங்களாக இடை நடுவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.625.0.560.350.160.300.053.800.1280.160.70 (3)

மேலும் குறித்த வேலைத்திட்டங்கள் தரமற்றதாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்துக்களும் பாதிப்படைந்துள்ளதோடு, மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அண்மையில் பெய்த கடும் மழையின் காரணமாக தற்போது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீதி, முழுமையாக சேதமடைந்துள்ளது. எனினும் உரிய அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் இருந்து வைத்தியசாலை வரையிலாக குறித்த வீதி மிக முக்கிய பிரதான வீதியாக காணப்படுகின்றது.625.0.560.350.160.300.053.800.1280.160.70 (2)

குறிப்பாக மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு குறித்த வீதியே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே உரிய அதிகாரிகள் குறித்த விடயத்தில் அக்கரை செலுத்தி அரை குறையாக காணப்படுகின்ற குறித்த 3 கல்வெட்டுக்களை பூரணப்படுத்தி, வீதியை உரிய முறையில் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *