பிரதான செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்ய நடவடிக்கை!

தமிழ் – சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்தின் போது மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்வதற்கு விசேட நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைப் பரிசோதிப்பதற்கான சுவாச பரிசோதனை கருவிகள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சட்டத்தை கடைப்பிடிப்பதுடன், தங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த காலப் பகுதியில் பொலிஸார் இரவு பகலாக நடமாடும் ரோந்துப் பணிகளில் முன்னெடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோதனைச் சாவடிகளும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் றிஷாட்

wpengine

அமைச்சர்­களின் விட­ய­தா­னங்­களில் மாற்­றம்

wpengine

நரேந்திர மோடி இன்று அனுராதபுரம் செல்கின்றார் . .!

Maash