பிரதான செய்திகள்

மண்ணெண்ணெய் கொள்வனவுக்கான உயிரை விட்ட மொஹமட் இலியாஸ்

நேற்றைய தினமும் (19) 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் எரிவாயு வரிசைகள் காணப்பட்ட நிலையில் சில இடங்களில் வீதிகளை மறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதேவேளை, மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக கண்டி வத்தேகம பிரதேசத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

எல்லேபொல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வத்தேகம உடுதலவின்ன பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய மொஹமட் இலியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த அந்த நபர், மழையில் நனைந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” ரிஷாட்

wpengine

இரவு நேரத்திலும் குடி நீர் வழங்க அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை

wpengine

சண்டித்தனம் காட்டிய கூட்டமைப்பின் மன்னார் நகர சபை தவிசாளர்! முசலி அரசியல்வாதிகள் வாய்மூடி மௌனம்

wpengine