பிரதான செய்திகள்

மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்து (படங்கள்)

(எம்.ரி.எம்.யூனுஸ்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்பாக முச்சக்கரவண்டி இன்று காலை (12.06.2016) விபத்துக்குள்ளானது.

மட்டக்களப்பு போதனா வைத்தாயசாலைக்கு உறவினரை பார்வையிடச் சென்று காத்தான்குடிக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே வேகக்கட்டுப்பாட்டை இழந்து  நித்திரை காரணமாக மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றதாக விபத்துக்குள்ளானோர் தெரிவித்தனர்.

சிறு காயங்களுக்குள்ளான நிலையில் முச்சக்ரவண்டியில் பயணம் செய்தவர்கள் மூவரும் வீடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

1c34f1dc-5169-4fb3-ac4a-8ad7ccac55977d4c4f1e-8ea9-4974-8fd1-c1832fc63748

Related posts

மஸ்ஜித்களில் இடம்பெறும் அனைத்து ஜூம்ஆ உரைகள் அனுப்பி வைக்க வேண்டும்.

wpengine

850 தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்து கொள்ள நடவடிக்கை

wpengine

ஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில் அங்குரார்ப்பண விழாவில் அமைச்சர் றிசாத்

wpengine