பிரதான செய்திகள்

மக்கள் விடுதலை முன்னணியின் மீட்புப் படையணியான செந்தாரகைப் படையணி மீண்டும்

நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்த நிலையை முன்னிட்டு நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் செந்தாரகைப் படையணியினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் மீட்புப் படையணியான செந்தாரகைப் படையணி தற்போது தென்னிலங்கையின் பல பிரதேசங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உயிரிப்பை ஏற்படுத்திய சுனாமிப் பேரிடரின் போது செந்தாரகைப் படையணி ஜே.வி.பியினரால் முதன்முதலாக களமிறக்கப்பட்டிருந்தது.

அதன் போது அரசாங்க அதிகாரிகள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளை விட அதிகளவான நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை செந்தாரகைப் படையணியினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈ.பி.டி.பிக்கும் அங்கஜனுக்கும் இடையில் மோதல்! பலர் புறக்கணிப்பு

wpengine

இனங்களையும் சமமாக மதிக்கும் சஜித் பிரேமதாசாவுக்கே அமோக வாக்குகள் கிடைக்கும் அமைச்சர் றிஷாட்

wpengine

களனி புதிய பாலத்தில் எரிந்த கார்!

Editor