பிரதான செய்திகள்

பௌத்த கொடி எரிப்பு : ஜூன் மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியல்!

கடந்த வெசாக் போயா தின இரவில் மஹியங்கனை பிரதேசத்தில் தம்பகொல கிராமத்தில் பௌத்த கொடி மற்றும் வெசாக் கூடுகளை எரித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான 8 இளைஞர்களும் எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் கூறியுள்ளார்.

குறித்த சந்தேகநபர்களை மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜாங்க அமைச்சரின் “செல்பி”! மாணவர்களின் பைத்தியம்

wpengine

மறைந்த கோசல நுவன் ஜயவீரவின் வெற்றிடத்துக்கு பாடசாலை அதிபர் Mp ஆகிறார்.

Maash

பீ.பீ.பொற்கேணி கமநல சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு (படங்கள்)

wpengine