பிரதான செய்திகள்

போலி அனுமதிப்பத்திரம்! உதய கம்மன்பில கைது

பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று காலையே தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

நுகேகொட, பூகொட வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து தான் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய வர்த்தகரான ப்ரயன் செடிக் என்பவருக்கு சொந்தமான 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள், போலி அட்டோனி அனுமதிப்பத்திரம் மூலம் உதய கம்மன்பிலவினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ப்ரயன் செடிக் என்பவரின் அட்டோனி அனுமதிப்பத்திர உரிமையாளரான லசித பெரேராவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உதய கம்மன்பிலவிடம் விசாரணை இடம்பெற்று வந்தது.

இந்தக் குற்றச்சாட்டில் வைது செய்யப்பட்ட உதய கம்மன்பில இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

மாணவர்கள் கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு: விரிவான பாலியல் கல்வி தொடர்பில் ஆராய்வு.

Maash

மும்மன்ன முஸ்லிம் கிராமத்தில் இன்று ஞானசார தேரரின் உரை! மக்கள் அச்சத்தில்

wpengine

பாரதியார் பிறந்த தின கவிதை போட்டியிலே பங்கேற்றஊடகவியலாளர் தர்மேந்திராவுக்கு பாராட்டு சான்றிதழ்

wpengine