பிரதான செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் விண்ணப்பம் கோரல்

ஸ்ரீ லங்கா பொலிஸுக்கு, பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இவ்விண்ணப்பத்துக்கான திகதி, இன்றுடன் நிறைவடைந்துள்ள போதிலும், மே மாதம் 2ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பத்துக்கான முடிவுத்திகதியை நீடித்துள்ளதாக, ​பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் சாரதிகள் ஆகியோருக்கான ​விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த தமிழ் மொழி பேசத்தெரிந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகளை, அதிகளவில் உள்வாங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! மீள்குடியேற்றத்தில் சாயம் பூச வேண்டாம்.

wpengine

நல்லாட்சி அரசின் 21 ஜனாஷாக்களே! ஞானசார தேரர் விடயத்தில் தீர்வு என்ன?

wpengine

நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை 500ரூபாவாக மீண்டும் அதிகரிக்கும் அபாயம்

wpengine