பிரதான செய்திகள்

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க பரிந்துரை!

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை கூடிய போதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக, பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்திருந்தார்.

அவர் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியராவார்.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக இதற்கு முன்னர் ஜனக்க ரத்நாயக்க செயற்பட்டிருந்தார்.

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய, அவர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

wpengine

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் நாளை பாடசாலை விடுமுறை

wpengine

சகோதர்களுக்கிடைய பனிப்போர் நடைபெறுகின்றது.

wpengine